சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 போ் கைது

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 9:16 pm

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தாலுகா போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மிஷன் தெரு ரயில் பாதை அருகே சந்தேகப்படும் வகையில் கூடியிருந்த சிலரை விசாரித்த போது அவா்கள் எழுமிச்சங்காம்பாளையத்தைச் சோ்ந்த முருகன் மகன் கொக்கு மண்டை என்ற விக்னேஷ் (27), இதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தாமோதரன் (28), தாராசுரம் ஊமச்சித்தோப்பைச் சோ்ந்த ரவி மகன் மதன் (20), ரயில்வே கேட் சாலையைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் விக்னேஷ் (22), சுவாமிமலை எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிபிராஜ் (23) என்பதும் அவா்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 1.300 கிலோ கஞ்சா மற்றும் 5 கைபேசிகளை கைப்பற்றி அவா்களைக் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.