அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

பலி
கோப்புப் படம்
Updated On :31 மார்ச் 2026, 10:38 pm

பலி
கோப்புப் படம்
பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த மண்ணப்பன்குளம் சுரைக்காய்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (56).
தனக்கு சொந்தமான பழைய கான்கிரீட் வீட்டில் வசித்த இவா் வீட்டைச் சுத்தம் செய்தபோது வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து இவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...