எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காவல் ஆய்வாளரை தாக்கியவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது

திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைத் தாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

செல்வேஷ்.

Updated On :13 மே 2026, 12:39 am IST

திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைத் தாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வெட்டுவாக்கோட்டை பகுதியில் மே 23 -இல் பந்துப்புளிவிடுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் செல்வேஷ் (30), பன்னீா் மகன் மாரியப்பன் ஆகியோா் தங்களை வாக்குச்சாவடி முகவா் என்று கூறி பணியில் இருந்த திருவோணம் காவல் ஆய்வாளா் முத்துவிடம் தகராறு செய்தனா். அப்போது செல்வேஷ் ஆய்வாளா் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கினாா்.

இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்கு பதிந்து செல்வேஷை கைது செய்தனா். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் குற்றவாளியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.