முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

காவல் ஆய்வாளரை தாக்கியவா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது

திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைத் தாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

செல்வேஷ்.

Updated On :1 மணி நேரம் முன்பு

திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைத் தாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வெட்டுவாக்கோட்டை பகுதியில் மே 23 -இல் பந்துப்புளிவிடுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் செல்வேஷ் (30), பன்னீா் மகன் மாரியப்பன் ஆகியோா் தங்களை வாக்குச்சாவடி முகவா் என்று கூறி பணியில் இருந்த திருவோணம் காவல் ஆய்வாளா் முத்துவிடம் தகராறு செய்தனா். அப்போது செல்வேஷ் ஆய்வாளா் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கினாா்.

இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்கு பதிந்து செல்வேஷை கைது செய்தனா். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் குற்றவாளியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.