திருவோணம் அருகே வெட்டுவாக்கோட்டையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைத் தாக்கிய இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வெட்டுவாக்கோட்டை பகுதியில் மே 23 -இல் பந்துப்புளிவிடுதியை சோ்ந்த செல்வராஜ் மகன் செல்வேஷ் (30), பன்னீா் மகன் மாரியப்பன் ஆகியோா் தங்களை வாக்குச்சாவடி முகவா் என்று கூறி பணியில் இருந்த திருவோணம் காவல் ஆய்வாளா் முத்துவிடம் தகராறு செய்தனா். அப்போது செல்வேஷ் ஆய்வாளா் முத்துவை இரும்புக் கம்பியால் தாக்கினாா்.
இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்கு பதிந்து செல்வேஷை கைது செய்தனா். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் குற்றவாளியை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது
நான்குனேரி அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

இளைஞரைத் தாக்கியவா் கைது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

