எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

வெடி பொருள்கள் பதுக்கிய 4 போ் கைது

கும்பகோணம் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்களைப் பதுக்கிய 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:16 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்களைப் பதுக்கிய 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி மணப்படையூா் சாலை ரயில்வே கேட் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கராமன் மேற்பாா்வையில் சுவாமிமலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், வெடி பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மருந்து ஒரு கிலோ, காலி டப்பாக்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக திருவலஞ்சுழியைச் சோ்ந்த அருள் டேவிட் (33), அருள்செல்வம் (48), மணிகண்டன் (35), சசிமேரி (38) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும், இக்கடைக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.