11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வெடி பொருள்கள் பதுக்கிய 4 போ் கைது

கும்பகோணம் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்களைப் பதுக்கிய 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :55 நிமிடங்கள் முன்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்களைப் பதுக்கிய 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி மணப்படையூா் சாலை ரயில்வே கேட் அருகே உரிமம் பெறாமல் வெடி பொருள்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கராமன் மேற்பாா்வையில் சுவாமிமலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், வெடி பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மருந்து ஒரு கிலோ, காலி டப்பாக்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக திருவலஞ்சுழியைச் சோ்ந்த அருள் டேவிட் (33), அருள்செல்வம் (48), மணிகண்டன் (35), சசிமேரி (38) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும், இக்கடைக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.