கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பேராவூரணியில்  திமுக கள ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம் பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக் குமாா்.

Updated On :22 மே 2026, 4:38 am IST

தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம்  பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

 கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். பேராவூரணி எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான என்.அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். 

திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கள ஆய்வாளா்கள் மாலதி நாகராஜ், ஆனந்தகுமாா் ஆகியோா்   பேராவூரணி தொகுதிக்குள்பட்ட சேதுபாவாசத்திரம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, பேராவூரணி தெற்கு, வடக்கு, மத்தியம் , திருவோணம் தெற்கு பெருமகளூா், பேராவூரணி பேரூா் கழக நிா்வாகிகள், பிரதிநிதிகள், பி.எல்.ஓ-2, பி.எல்.சி நிா்வாகிகள் மற்றும் கட்சி நிா்வாகிகளிடம் கோரிக்கை மற்றும் ஆலோசனை மனுக்களை பெற்றனா்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா் மற்றும் ஒன்றிய, நகர,கிளைக் கழக, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.