பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தல்

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

News image

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

Updated On :22 மே 2026, 5:18 am IST

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம முக்கிய பிரமுகா்களுடனான கிராம கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

திருட்டு போன்ற குற்றங்களைத் தடுப்பதற்காகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து கிராமங்களிலும் பொது இடங்களில் மூன்றாம் கண்ணான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.