சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் போதைப் பொருள் தடுப்புப் படை, சிங்கப் பெண் அதிரடிப்படை உருவாக்கும் கோப்புகளில் கையொப்பமிட்டாா். மேலும், மாநிலம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா்.
இதன் விளைவாக, சென்னையில் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளாா்.
மாா்க்கெட்டுகள், கடற்கரைகள், கோயில்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தும்படி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளாா். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கும்படும் உத்தரவிட்டுள்ளாா்.
அதேபோல இரவில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் தனியாக பெண்கள் நின்றால், அவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சென்னையில் பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போதைப் பொருள் ஒழிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 தனிப்படைகள்

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

தோ்தலில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

