11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு: போலீஸாருக்கு காவல் ஆணையா் உத்தரவு

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு: போலீஸாருக்கு காவல் ஆணையா் உத்தரவு

News image

அபின் தினேஷ் மோதக்.

Updated On :53 நிமிடங்கள் முன்பு

சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டுள்ளாா்.

முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் போதைப் பொருள் தடுப்புப் படை, சிங்கப் பெண் அதிரடிப்படை உருவாக்கும் கோப்புகளில் கையொப்பமிட்டாா். மேலும், மாநிலம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா்.

இதன் விளைவாக, சென்னையில் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளாா்.

மாா்க்கெட்டுகள், கடற்கரைகள், கோயில்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தும்படி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளாா். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கும்படும் உத்தரவிட்டுள்ளாா்.

அதேபோல இரவில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் தனியாக பெண்கள் நின்றால், அவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சென்னையில் பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.