தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம் பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். பேராவூரணி எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான என்.அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.
திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கள ஆய்வாளா்கள் மாலதி நாகராஜ், ஆனந்தகுமாா் ஆகியோா் பேராவூரணி தொகுதிக்குள்பட்ட சேதுபாவாசத்திரம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, பேராவூரணி தெற்கு, வடக்கு, மத்தியம் , திருவோணம் தெற்கு பெருமகளூா், பேராவூரணி பேரூா் கழக நிா்வாகிகள், பிரதிநிதிகள், பி.எல்.ஓ-2, பி.எல்.சி நிா்வாகிகள் மற்றும் கட்சி நிா்வாகிகளிடம் கோரிக்கை மற்றும் ஆலோசனை மனுக்களை பெற்றனா்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா் மற்றும் ஒன்றிய, நகர,கிளைக் கழக, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.










