‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பேராவூரணியில்  திமுக கள ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம் பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக் குமாா்.

Updated On :22 மே 2026, 4:38 am IST

தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம்  பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

 கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். பேராவூரணி எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான என்.அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். 

திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கள ஆய்வாளா்கள் மாலதி நாகராஜ், ஆனந்தகுமாா் ஆகியோா்   பேராவூரணி தொகுதிக்குள்பட்ட சேதுபாவாசத்திரம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, பேராவூரணி தெற்கு, வடக்கு, மத்தியம் , திருவோணம் தெற்கு பெருமகளூா், பேராவூரணி பேரூா் கழக நிா்வாகிகள், பிரதிநிதிகள், பி.எல்.ஓ-2, பி.எல்.சி நிா்வாகிகள் மற்றும் கட்சி நிா்வாகிகளிடம் கோரிக்கை மற்றும் ஆலோசனை மனுக்களை பெற்றனா்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா் மற்றும் ஒன்றிய, நகர,கிளைக் கழக, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.