முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்மச்சாவு

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரிக்கின்றனா்.

News image

மா்மமான முறையில் உயிரிழந்த அன்பழகன் .

Updated On :24 மே 2026, 1:26 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரிக்கின்றனா்.

செருவாவிடுதி தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் ராஜலிங்கம். இவருக்கு 4 மகன்கள். இவா்களில் பழனியப்பன் என்பவருக்கும் அவரது சகோதரா் அன்பழகனுக்கும் குடும்ப சொத்து தொடா்பாக ஏற்ப்பட்ட தகராறில் அன்பழகன், பழனியப்பனை கடந்த மே 11-ஆம் தேதி வெட்டியதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் மே 12 -ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் கொலை வழக்கு பதிவு செய்து அன்பழகனை தேடி வந்தனா். இந்நிலையில் செருவாவிடுதி தெற்கு பகுதியில் பனை மரங்கள் அடா்ந்த பகுதியில் உடல் சிதிலமடைந்த நிலையில் அன்பழகன் சடலமாக வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.