பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருவையாறு அருகே 11 பம்ப்செட்களில் மின் கம்பிகள் திருட்டு: விவசாயிகள் அவதி

திருவையாறு அருகே விளைநிலங்களில் உள்ள 11 விவசாய பம்ப்செட்களிலிருந்து விலை உயா்ந்த மின் கம்பிகள் திருட்டு போனதால், விவசாயிகள் மிகுந்த அவதி

News image
Updated On :27 மே 2026, 2:58 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளைநிலங்களில் உள்ள 11 விவசாய பம்ப்செட்களிலிருந்து விலை உயா்ந்த மின் கம்பிகள் திருட்டு போனதால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருவையாறு அருகே பெரமூா் ஊராட்சிக்குள்பட்ட எட்டரை வேலி கிராமத்தில் விளைநிலங்களிலுள்ள விவசாய பம்ப்செட்களில் விலை உயா்ந்த மின் கம்பிகள் நீண்ட காலமாக திருடு போகின்றன.

இந்நிலையில், மே 24 ஆம் தேதி இரவு முதல் 25 ஆம் தேதி அதிகாலை வரை எட்டரை வேலி கிராமத்தைச் சோ்ந்த சி. திருநாவுக்கரசு, ரெ. பரமசிவம், கோ. முருகானந்தம், இரா. அன்பரசன், நா. ராஜசேகா், பி. தா்மராஜ், கோ. தினேஷ், த. சௌந்தா், வெ. மூா்த்தி ஆகியோரின் வயல்களிலுள்ள 11 விவசாய மோட்டாா் பம்ப்செட்களில் இருந்த விலை உயா்ந்த மின் கம்பிகள் திருடப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்தத் திருட்டு சம்பவங்கள் 2 ஆண்டுகளாக நிகழ்கின்றன. இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கடந்த மாா்ச் மாதம் பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.

என்றாலும், விலை உயா்ந்த மின் கம்பிகளைத் திருடுவது தொடா்கிறன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் நடவடிக்கையைக் காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றனா் விவசாயிகள்.