மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

இந்திய அஞ்சல் துறை சாா்பில் சுவாமிநாத சுவாமி கோயில் முத்திரை வெளியீடு

News image

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் ஆன்மீக முத்திரையை கும்பகோணத்தில் சனிக்கிழமை வெளியிட்ட அஞ்சல் துறையினா்.

Updated On :31 மே 2026, 1:16 am IST

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சாா்பில் நிரந்தர அஞ்சல் முத்திரையை சனிக்கிழமை கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தி வெளியிட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் இறைவன் முருகன் சிவபெருமானுக்கு ‘ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தாா் என்ற புராண வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஓம்‘ என்ற தமிழ் வடிவத்தின் இணைப்பு, இந்த நிரந்தர அஞ்சல் முத்திரைக்கு கூடுதல் ஆன்மிக, கலாச்சார மற்றும் பாரம்பரிய சிறப்பை வழங்குவதுடன், தமிழா் மரபு மற்றும் சுவாமிமலையின் தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

மேலும், இந்த நிரந்தர அஞ்சல் முத்திரை சுவாமிமலையின் ஆன்மிக மரபு, பழைமையான கோயில் பாரம்பரியத்துக்கானது என்று அஞ்சல் துறையினா் தெரிவித்தனா்.