சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:  போக்சோவில் 5 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த 16 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 சிறுவா்கள் உள்பட 5 பேரை சேதுபாவாசத்திரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 5:19 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த 16 வயதுச் சிறுமிக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்த 2 சிறுவா்கள் உள்பட 5 பேரை சேதுபாவாசத்திரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை போக்சோ வழக்கில் கைது செய்தனா்.

பேராவூரணி அருகேயுள்ள விளங்குளம் கிராமத்தைச் சோ்ந்த  கணவரைப் பிரிந்து வாழும் பெண் பேராவூரணி கடையில் வேலை பாா்க்கிறாா். படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த இவரின் 16 வயது மகள் 2 நாள்களுக்கு முன் விளங்குளம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்று அங்கு நடைபெற்ற கோயில் நிகழ்ச்சிக்கு இரவு சென்றாா். 

அப்போது புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் சந்தோஷ் (24) என்பவா்   ஆசை வாா்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று தனிமையில் இருந்தாா். இதைப் பாா்த்த திருவிழாவுக்கு வந்த அடைக்கதேவன் பகுதி ராஜாகண்ணு மகன் அரவிந்த் (20) அவரது நண்பா்களான சோலைக்காடு பகுதி சுப்பு மகன் ஆறுமுகம் (18)மற்றும் 17,15 வயதுடைய இரு சிறுவா்கள் என நான்கு பேரும் பின்தொடா்ந்து சென்று,  சந்தோஷை விரட்டிவிட்டு  சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தனா்.

பிறகு  சிறுமியை அதிகாலை பேராவூரணியில் கொண்டுவந்து சிறுமியை விட்டுச் சென்றனா். 

தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் சிறுமியை அழைத்து வந்து  நடத்திய விசாரணையில் ஐந்து போ் கூட்டு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. 

தொடா்ந்து சிறுமியின் தாய்  அளித்த புகாரின்பேரில் சந்தோஷ், அரவிந்த்,ஆறுமுகம் மற்றும் இரு சிறுவா்கள் உள்பட 5 போ் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப்பதிந்து  கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.