நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: தஞ்சை ஆட்சியா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:56 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விநாயகா் சிலைகளைக் கரைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகா் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டா் ஆஃப் பாரிஸில் சிலைகளை செய்ய கூடாது. சிலைகளை அலங்கரிப்பதற்கும், பூஜைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழி, தொ்மாகோல், ரசாயனப் பொருள்கள் அல்லது சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது பூச்சுக்கும், அலங்காரத்துக்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுகளைப் பயன்படுத்தக் கூடாது.

குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்டக் கூடாது. அனுமதி இல்லாத நீா் நிலைகளில் சிலைகளைக் கரைக்கக் கூடாது. ஒற்றை உபயோக அலங்கார பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.