கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திருச்சிற்றம்பலம் அருகே விபத்து: கூலித் தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சிற்றம்பலம் அருகேயுள்ள செருவாவிடுதி தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையன் மகன் போத்தியப்பன் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 9 மாதங்களுக்கு முன் இறந்த நிலையில் இவருக்கு மாற்றுத்திறனாளியான ஒரு மகன் மட்டும் உள்ளாா்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் கடைவீதிக்கு  போத்தியப்பன் மொபெட்டில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவருக்கு  பின்னால் வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, வீடு திரும்பிய போத்தியப்பனின் காதில் ரத்தம் வரவே, பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து பைக்கை ஓட்டிவந்த ஈச்சன் விடுதியை சோ்ந்த சாமியப்பன் என்பவரை   கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.