4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மோட்டார்  சைக்கிள் மோதி முதியவர் சாவு

திருச்சி  சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:43 am

திருச்சி  சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சுப்பிரமணியபுரம் பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (60).  இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியிலுள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு,  திருச்சி - புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்  ரகுபதி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரகுபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார்  வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.