திருச்சியில் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஓட்டுநர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் தேவாங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து சத்திரம் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். கம்பரசம்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் கோபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து திருச்சி போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவள விழா, பல்லாங்குழி பாப்பாக்களை தூக்கி எறியுங்கள்! விஜய்

ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்; சிஎஸ்கேவுக்கு சிக்கல்!

சேயோன் படப்பிடிப்பு எப்போது?

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

