வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில்பேச்சுக்கலைப் பயிற்சி

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுக்கலை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On :21 மே 2018, 9:02 pm

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுக்கலை பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
கோடைகாலத்தை மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமெனில் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஓரிகாமி-காகிதகலைப் பயிற்சி, கண்காட்சி, சதுரங்கப் போட்டிக்கான பயிற்சி, நீங்களும் சாதனையாளர்களாக ஆகலாம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட நூலகத் துறை சார்பில் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு நிகழ்வாக, திங்கள்கிழமை மாணவ, மாணவிகளுக்கான பேச்சுக்கலைப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் தொடக்கி வைத்தார். ஜெ.சி.ஐ. திருச்சி ராக்டவுனை சேர்ந்த சந்தோஷ், விஜய் மித்ரா, வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி ஆகியோர் அளித்தனர். இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.