நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

விசிக பிரமுகர் கடத்தல்: ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியதாக புகார்

திருச்சியில் ரூ. 1 கோடி கேட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் மற்றும் தொழிலதிபரைக் கடத்திய மர்ம கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 9:34 am IST

திருச்சியில் ரூ. 1 கோடி கேட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் மற்றும் தொழிலதிபரைக் கடத்திய மர்ம கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர். 
திருச்சி கே. கே. நகர்,  சிம்கோ தொழிற்சாலை அருகேயுள்ள  கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற அழகர்சாமி (45). இவர், தனது தம்பி ரமேஷ் குமாருடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக உள்ளார்.
திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், மன்னார்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.  அப்போது 2 கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், அழகர்சாமி சென்ற காரை மறித்து, அரிவாள் மற்றும் கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனர்.
மேலும், அவரிடமிருந்த  ரொக்கம் ரூ. 4 லட்சம்,  அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்ட 18 பவுன்  நகைகளை பறித்துக் கொண்டனர். பின்னர், விராலிமலை அருகே அவரை இறக்கிவிட்டு மேலும் ரூ.1 கோடி தர வேண்டும் என அந்த கும்பல் மிரட்டிச் சென்றுள்ளது.
கும்பலிடமிருந்து தப்பி வந்த அழகர்சாமி கே.கே. நகர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.