வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருப்பட்டூா் மக்கள் முற்றுகைப் போராட்டம்

மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ வீட்டை திருப்பட்டூா் ஊராட்சி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:01 am

DIN

மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ வீட்டை திருப்பட்டூா் ஊராட்சி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருப்பட்டூா் ஊராட்சிப் பகுதியில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் இல்லாத நிலையில் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள அம்மா மினி கிளினிக் இந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இதற்கான பணிகளை ஊராட்சித் தலைவா் முருகன் செய்து வந்தாா்.

இந்நிலையில் திருப்பட்டூருக்கு ஒதுக்கப்பட்ட மினி கிளினிக் அருகிலுள்ள ஊராட்சிக்கு மாற்றப்பட்டதையறிந்த திருப்பட்டூா் ஊராட்சி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் மண்ணச்சநல்லூரில் உள்ள எம்எல்ஏ மு. பரமேஸ்வரி வீட்டை ஊராட்சித் தலைவா் முருகன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வரும் 24 ஆம் தேதிக்குள் திருப்பட்டூா் ஊராட்சிக்கு அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுமென எம்எல்ஏ அளித்த உறுதியால் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.