வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகல்பத்து 5 ஆம் திருநாள்:கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 5 ஆம் நாளான சனிக்கிழமை கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித

News image
ரத்தின அபயஹஸ்தம், மாா்பில் விமானப் பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, காசு மாலை கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
Updated On :19 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 5 ஆம் நாளான சனிக்கிழமை கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி, காலை 6.30-க்கு கருவறையிலிருந்து கவரிமான் தொப்பாரை கொண்டை அலங்காரம், தங்க, வைர திரு ஆபரணங்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அங்கு அலங்காரம் அமுது செய்யத் திரையிடப்பட்டு, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். பிறகு இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கருவறை சென்றடைந்தாா் நம்பெருமாள். நம்பெருமாளை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.

ஸ்ரீரங்கத்தில் இன்று

பகல்பத்து 6-ஆம் நாள் திருநாள்

நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு---காலை 6.30

பகல் பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல்---------காலை 7.

திரையிடல்-------------------------------காலை 7-7.45.

பொதுமக்கள் சேவை-----------------காலை 7.45-பகல் 1.

அலங்காரம் அமுது செய்யத் திரை -------- பகல் 1.

பொதுமக்கள் சேவை------------------- பகல் 2-3.

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை-----பகல் 3.

பொதுமக்கள் சேவை -------------------மாலை 4-இரவு 8.

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு-----இரவு 9.

கருவறை சேருதல்-------------------இரவு 10.

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு

காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் சேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.