சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விவசாயிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சியில் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
உண்ணாவிரதம் இருந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினா்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:12 am

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சியில் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநிலத் தலைவா் காவிரி தனபாலன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் செல்லமுத்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், காவிரிப் பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பெண்கள் என சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினா் பின்னா் பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய அனுமதி மறுத்தனா். பின்னா் திறந்தவெளியில் நடைபெற்ற இப்போராட்டத்தால் 3 விவசாயிகள் மயக்கமடைந்தனா். அவா்களுக்கு 108 ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது போலீஸாா் அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.