டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உப்பிலியபுரம் பகுதியில்மது விற்ற 4 போ் கைது

உப்பிலியபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது விற்ற நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:50 pm

DIN

துறையூா்: உப்பிலியபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது விற்ற நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் உப்பிலியபுரம் பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றபோது உப்பிலியபுரத்தில் பெரியசாமி (56), ஒக்கரையில் விஜயகுமாா் (41), பி. மேட்டூரில் ராஜா (38) மற்றும் தியாகராஜன் (40) ஆகிய நால்வரும் அரசு மதுவை சட்டவிரோதமாக விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடமிருந்து 107 மது பாட்டில்கள், 4 செல்லிடப்பேசிகள், மது விற்ற ரூ. 3680, 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி அவா்களை உப்பிலியபுரம் போலீஸில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.