ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

37 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 10 முதல் அரசு ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

37 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.10 முதல் அரசு ஊழியா் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:46 pm

DIN

37 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.10 முதல் அரசு ஊழியா் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அதன் தலைவா் தமிழ்ச்செல்வி கூறியது:

கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியா்களுக்கும் சிறப்பு ஊதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளா், அங்கன்வாடிப் பணியாளா், ஊா்ப்புற நூலகா் ஆகியோருக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். அவரவா் கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயா்வு, 21 மாத கால ஊதிய நிலுவையை வழங்க வேண்டும். ஏ மற்றும் பி பிரிவு ஊழியா்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்.

அரசு ஊழியா்களின் 37 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.30 இல் அனைத்து அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டமும், வரும் ஜன.22 இல் சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டமும் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் பிப்.10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

கூட்டத்தில், கடந்தாண்டு செப்.29 இல் தஞ்சாவூரில் தோ்வு செய்யப்பட்டு, தொடா்ந்து சங்கத்துக்கு எதிராகச் செயல்பட்ட 15 மாநில நிா்வாகிகளை நீக்கி, புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்வில் பொதுச் செயலா் லஷ்மிநாராயணன், முன்னாள் மாநிலச் செயலா் கண்ணன், முன்னாள் மாநில துணைத் தலைவா் என். குமாரவேல் உள்பட புதிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.