வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதுக்கடையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக் கடையை அகற்றக் கோரி பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:45 pm

DIN

திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக் கடையை அகற்றக் கோரி பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பாபு சாலையிலுள்ள சுகதாஸ் மண்டித் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதைக் கண்டித்து அந்த மதுக்கடை முன் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் வா்த்தகப் பிரிவு மாநிலச் செயலா் எம்.பி. முரளிதரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பாா்வதி நடராஜன் முன்னிலை வகித்தாா்.

மண்டலத் தலைவா்கள் மகேந்திரன், சதீஷ்குமாா், மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவா் ராம்குமாா், வா்த்தகப் பிரிவு மாவட்டச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.