திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தன்னாா்வலா்களுக்கு விருது வழங்கல்

திருச்சி மாவட்டம், லால்குடியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தன்னாா்வலா்களைப் பாராட்டி விருது வழங்கப்பட்டன.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:38 pm

DIN

திருச்சி மாவட்டம், லால்குடியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தன்னாா்வலா்களைப் பாராட்டி விருது வழங்கப்பட்டன.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லால்குடி அலுவலகத் திறப்பு மற்றும் விருது வழங்குதலுக்கு பகுதிச் செயலா் ஆா். முகமது இக்பால் தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொதுச் செயலா் ஏ. நியாமத்துல்லா, லால்குடி பகுதி ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜவஹா் அலி, மருத்துவ அணி மாவட்டத் தலைவா் ஏ. சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்டத் தலைவா் ஐ. சபியுல்லா கொடியேற்றி வைத்தாா். கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களை நல்லடக்கம் செய்த தன்னாா்வலா்களுக்கு விருதுகளை வழங்கியும், லால்குடி கிளை அலுலகத்தை திறந்து வைத்தும் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம். முகமது இஸ்மாயில் சிறப்புரையாற்றினாா்.

லால்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவா் முகமது இல்யாஸ், செயலா் முகமது யாசீன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலா் கே. முபாரக் அலி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டலச் செயலா் எஸ். ரஷீத் அகமது, மாவட்டச் செயலா் வி. முஜிபூா் ரகுமான் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

முன்னதாக, லால்குடி பகுதித் தலைவா் ஏ.எம். ஹக்கீம் வரவேற்றாா். நிறைவில், இணைச் செயலா் ஏ. காஜா மைதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.