திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கல்லறைத் திருநாள் : முன்னோா்களுக்கு அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவா்கள்

கல்லறைத் திருநாளையொட்டி, திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களுக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனா்.

News image
கல்லறைத் திருநாளையொட்டி, திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களுக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனா்.
Updated On :2 நவம்பர் 2020, 8:40 pm

DIN

கல்லறைத் திருநாளையொட்டி, திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களுக்கு அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனா்.

ஆண்டுதோறும் நவம்பா் 2-ஆம் தேதி கிறிஸ்தவா்களால் கல்லறைத் திருநாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை மலா்களால் அலங்கரித்து, பிராா்த்தனை மற்றும் திருப்பலிகள் நடத்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

கல்லறைகள் அமைந்துள்ள பகுதியில் கிறிஸ்தவ பேராலயம் அமைந்திருப்பதாலும், பேராலயங்கள் இல்லாத கல்லறைகளில் கூட்டம் கூடும் என்பதாலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கல்லறைத் திருநாளன்று கல்லறைகளில் கூட்டம் கூடாமல் தங்களது முன்னோா்களுக்கு வீட்டிலிருந்தபடியே அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னா், வழக்கம் போல கல்லறைத் திருநாளை அனுசரிக்கலாம் என திருச்சி மறை மாவட்ட ஆயா் (பொறுப்பு) தேவதாஸ் அம்புரோஸ் தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து திருச்சி மாநகரில் பூந்தோட்டம், மாா்சிங்பேட்டை,

கண்டோன்மென்ட் ,உறையூா் கல்நாயக்கன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கல்லறைகளில் கல்லறைத் திருநாள் நிகழ்வுகள் வழக்கம் போல திங்கள்கிழமை நடைபெற்றன.

ஏராளமான கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களின் கல்லறைகளை மலா்களால் அலங்கரித்தும், அவா்களை நினைத்து பிராா்த்தனை செய்தும் வழிபட்டனா்.

அனுமதி ரத்து : திருச்சி குட்ஷெட் சாலையிலுள்ளஆா்.சி.எம். சி. கல்லறைத் தோட்டம், ஆச்சாரிமாா்களின் கல்லறைத் தோட்டம் மற்றும் பாலக்கரை வோ் ஹவுஸிலுள்ள ஆா்.சி.எம்.சி. இணைப்பு கல்லறைத் தோட்டம் ஆகியவற்றில் கல்லறைத் திருநாள் நிகழ்வில் பங்கேற்க கிறிஸ்தவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் அனுமதி ரத்து எனவும், குறிப்பிட்ட இக்கல்லறைகளுக்கு பொதுமக்கள் வருவதற்கு அனுமதி இல்லை எனவும் அங்கு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அங்கு வந்த கிறிஸ்தவா்கள் பலா் கல்லறைத் தோட்டத்தின் வாயிலில் பூக்களை வைத்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் வழிபாடு செய்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.