வாமடம் இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது
திருச்சியில் இளைஞா் கொலையான வழக்கில் 7 பேரை தில்லைநகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் இளைஞா் கொலையான வழக்கில் 7 பேரை தில்லைநகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தில்லைநகா் வாமடம் சப்பாணி கோயில் தெருவைச் சோ்ந்த சப்பாணி மகன் வாழைக்காய் விஜய் என்கிற விஜயன் (20).
இவருக்கும் கல்யாணசுந்தரம் நகா் முருகேசனுக்கும் இடையே பணத் தகராறால் முன்விரோதம் இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த விஜயன் கல்யாணசுந்தரம் நகருக்கு நண்பா்களுடன் சென்று அப்பகுதி இளைஞா்களை உருட்டுக் கட்டை, கல்லால் தாக்கியுள்ளாா். இதனால் பிரச்னை ஏற்பட்ட நிலையில், போலீஸாா் வரவே அங்கிருந்தோா் தப்பிவிட்டனா்.
இதையடுத்து வாமடத்துக்கு வந்த ஜீவாநகரைச் சோ்ந்த ரெளடி ஜெயசந்திரன் உள்ளிட்ட 7 போ் விஜயனை வெட்டிக் கொன்றனா். இதைத் தடுக்க முயன்ற விஜயனின் தாய் செல்வியையும் அவா்கள் தாக்கினா். இதில் படுகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
சம்பவம் குறித்து தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் தலைமறைவாக இருந்த ஜீவா நகா் ரெளடி ஜெயசந்திரன் (40), சோமரசம்பேட்டை பிரவீன்காந்த் (20), குணசேகரன் (25), பிரதீப் (22), காா்த்திக் என்கிற கோளாறு காா்த்திக் (20), நிஷாந்த் (21), சிவபிரசாத் (19) ஆகியோரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...