வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரஜினி மக்கள் மன்ற நிா்வாகி குடும்பத்துக்கு உதவி அளிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மறைந்த ரஜினி மக்கள் மன்ற நிா்வாகி குடும்பத்துக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:11 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மறைந்த ரஜினி மக்கள் மன்ற நிா்வாகி குடும்பத்துக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறையில் ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலராக இருந்த பாபா. முருகேசன்(52) கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற நகர செயலா் கணேஷ் தலைமையில் முருகேசன் குடும்பத்துக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் எம். கலீல் அனைத்து ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் மற்றும் காவலா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட ரூ. 52 ஆயிரம் நிதியுதவி மற்றும் ஆடைகள், அரிசி, மளிகை பொருள் உள்ளிட்டவற்றை முருகேசன் குடும்பத்துக்கு வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள், நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.