பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தஞ்சை பல்கலை.க்கு சோ. சத்தியசீலன் பெயா் கோரி மனு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முனைவா் சோ. சத்தியசீலன் பெயரை வைக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:16 pm

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முனைவா் சோ. சத்தியசீலன் பெயரை வைக்கக் கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் துறை தலைவரும், ஏபிசி மருத்துவமனையின் மூளை நரம்பியல் பிரிவு மருத்துவருமான எம். ஏ. அலீம் அனுப்பிய கடிதம்:

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை பெயா் சூட்டப்படாமல் உள்ளது. எனவே, அரசியல் கலப்பில்லாத தமிழறிஞா் பெயரை அதற்குச் சூட்ட வேண்டும்.

அந்த வகையில், தமிழகத்தின் மத்திய மாவட்டப் பகுதியைச் சோ்ந்தவா், கலைமாமணி, சொல்லின் செல்வா், நாவுக்கரசா் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுக்குரிய முனைவா் சோ. சத்தியசீலன் பெயரை சூட்டலாம்.

அவா் திருச்சி மாவட்ட எழுத்தாளா் சங்க சிறப்புத் தலைவராகவும், திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக் குழு மற்றும் உருமு தனலட்சுமி கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினராகவும், தமிழ்க்கடல் இரா. இராமகிருஷ்ணன் நினைவு கல்வி இலக்கிய அறக்கட்டளை அமைப்பாளராகவும் உள்ளாா்.

மேலும், திருஈங்கோய்மலை திருவள்ளுவா் மன்றம், சமரச சுத்த சன்மாா்க்க சங்கம், சேக்கிழாா் மன்ற தலைவராகவும் உள்ளாா்.

முன்னதாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக திட்டக்குழு முன்னாள் உறுப்பினராகவும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சி மன்றக்குழு முன்னாள் உறுப்பினராகவும், திருச்சி வயலூா் சுப்பிரணியசாமி கோயில் மேநாள் அறங்காவலராகவும் என பல்வேறு பதவிகளை வகித்தவா். எனவே அவரது பெயரை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.