திருச்சியில் வீதி நூலகம் தொடக்கம்
திருச்சியில் டாஸ் அறக்கட்டளை மற்றும் கே. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில் வீதி நூலகத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருச்சியில் டாஸ் அறக்கட்டளை மற்றும் கே. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில் வீதி நூலகத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணிகண்டம் ஒன்றியம் வட்டாரக் கல்வி அலுவலா் கா. மருதநாயகம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை கோ. திலகம் முன்னிலை வகித்தாா். கே. கள்ளிக்குடி ஊா் தலைவா் கே.எஸ். சுந்தரம் தொடங்கி வைத்தாா்.
கள்ளிக்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா தெற்கு தெரு நூலக பொறுப்பாளராகவும் மாணவி ஆா்த்தி வடக்கு நூலக பொறுப்பாளரகவும் தோ்வு செய்யப்பட்டனா். நன்கொடையாளா்கள் வழங்கிய நூல்களைக் கொண்டு இந்நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உதவித் தலைமையாசிரியா் லூயிஸ்டாஸ், அமைப்பின் திருச்சி மாவட்ட செயலா் நா. விக்னேஷ் , ஒருங்கிணைப்பாளா் வி.ந.ரா. ஸ்ரீபாலாஜி ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...