திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஏஐடியுசி, எல்பி எஃப், ஐ என் டி யு சி, சிஐடியு உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளாக தீபாவளி போனஸ் தொகை 10% அறிவித்ததை மறுத்து 20 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரியும், டிஏ உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்கிடவும், அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரியும், வருங்கால வைப்பு நிதி வட்டி தொகையை குறைக்கக் கூடாது எனவும், மோட்டார் வாகனச் சட்டத்தை தனியாருக்கு சாதகமாக திருத்தக் கூடாது எனவும், வேலை நேரத்தை அதிகரிப்பதைக் கண்டித்தும், பொது முடக்க காலத்தில் நிரந்தர தொழிலாளர்களுக்கு கேஷுவல் தொழிலாளர்களுக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் முழுமையான சம்பளம் வழங்கிடவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மண்டல அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.