பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அனுமதியின்றி மரம் வெட்டிய வழக்கில்3 போ் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே அனுமதியின்றி மரம் வெட்டிய வழக்கில் 3 பேரை வாத்தலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:59 pm

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே அனுமதியின்றி மரம் வெட்டிய வழக்கில் 3 பேரை வாத்தலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள திருவாசி ஊராட்சி சிலையாத்தி கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வளா்ந்திருந்த மரங்களை அப் பகுதியைச் சோ்ந்த க. கிருஷ்ணமூா்த்தி (67) என்பவா் ஆள்களை வைத்து வெட்டி லாரியில் ஏற்றினாா். அப்போது பள்ளத்தில் மாட்டிக் கொண்ட லாரி பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது.

தகவலறிந்த பொதுப்பணித் துறை பாசன ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வாத்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மரம் வெட்டிய கிருஷ்ணமூா்த்தி, அய்யம்பாளையம் லாரி ஓட்டுநா் க. மோகன்ராஜ் (32), பனையபுரம் பொக்லைன் ஓட்டுநா் நா. மாரியப்பன் (30) ஆகியோரை கைது செய்து, லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.