கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பிகாரில் நக்சல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

பிகாரில் நக்சல் ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்து...

News image
ஆயுதங்கள்- கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 12:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரின் நவாடா பகுதியில் நக்சல் ஒருவரைக் கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பிகாரில், சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்.) மற்றும் மாவட்ட காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராஜௌலி பகுதியைச் சேர்ந்த அஜீத் குமார் யாதவ் என்பவரைக் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் தடை செய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எஃப்.ஐ.) எனும் அமைப்பைச் சார்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 21 பயன்படுத்தப்படாத தோட்டாக்களுடன் ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அவரது மறைவிடத்திலிருந்து 315 போர் ரைஃபிள்கள், 10 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள், 2 தோட்டாப் பெட்டி மற்றும் மூன்று உருமறைப்பு சீருடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.