பிகாரின் நவாடா பகுதியில் நக்சல் ஒருவரைக் கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிகாரில், சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எஃப்.) மற்றும் மாவட்ட காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராஜௌலி பகுதியைச் சேர்ந்த அஜீத் குமார் யாதவ் என்பவரைக் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் தடை செய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எஃப்.ஐ.) எனும் அமைப்பைச் சார்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 21 பயன்படுத்தப்படாத தோட்டாக்களுடன் ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அவரது மறைவிடத்திலிருந்து 315 போர் ரைஃபிள்கள், 10 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள், 2 தோட்டாப் பெட்டி மற்றும் மூன்று உருமறைப்பு சீருடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Police today arrested a Naxal in Bihar's Nawada area and seized weapons from him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலி!

கைது, கையடைவு, காவல் வைப்புக் கட்டளை - ஓர் அறிமுகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


