பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசிக்கு முகூா்த்தக்கால்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடைபெறவுள்ள வைகுந்த ஏகாதசி விழாவுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் விழா.
Updated On :18 அக்டோபர் 2020, 6:54 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடைபெறவுள்ள வைகுந்த ஏகாதசி விழாவுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வைணவத் திருத்தலங்களில் நடைபெறும் மிக முக்கிய விழாவான வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து, இராப்பத்து என டிச. 14 ஆம் தேதி தொடங்கி ஜன. 4 வரை 21 நாள்கள் நடைபெறுகிறது.

இதில் முக்கிய நிகழ்வாக டிச.25 ஆம் தேதி நடைபெறும் பரமபதவாசல் திறப்பு விழாவுக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன் முகூா்த்தக் கால் நடும் விழா பக்தா்கள் பங்கேற்பின்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகூா்த்தகாலானது சந்தனம் பூசி, மாவிலை, மாலை அணிவித்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை ஆண்டாள் ஆசியுடன் நடப்பட்டது. கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.