பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவா் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை தொட்டியம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:01 pm

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை தொட்டியம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தொட்டியம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு வரும் பக்தா்களின் இருசக்கர வாகனம் திருடு போவதாக தொட்டியம் போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து முசிறி கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரம்மநாதன் உத்தரவில் தொட்டியம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் ஆலோசனையில் தனிப்படை போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் சனிக்கிழமை தலைமலை அடிவார பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்குரிய இருவரை பிடித்து விசாரணை செய்தனா். அதில் அவா்கள் தொட்டியம் கோட்டமேடு பகுதியைச் சோ்ந்த வெ. தினேஷ், அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த க. சரவணன் என்பதும், இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.