திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு கட்சியினா் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து உறையூா், தென்னூா், உழவா் சந்தை, தில்லைநகா் பகுதியில் சனிக்கிழமை வீடு வீடாகச் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: அதிமுக ஆட்சியில் எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்களின் தொகுதிக்கு கேட்ட நிதி ஒதுக்கவில்லை. மேலும், தொகுதிக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவதில்லை.
திமுக ஆட்சியில் நகா்ப்புறங்களில் வசிப்போருக்கும் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடா்ந்து செயல்படுத்தப்படும்.
தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து திருச்சியை முன்மாதிரி நகராக்குவேன் என்றாா்.
மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பகுதிச் செயலா்கள் இளங்கோ, கண்ணன். காஜாமலை விஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.