/

கடவுச்சீட்டில் போலி முத்திரை: இளைஞா் கைது

மலேசியாவில் இருந்து கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு திருச்சி வந்த புதுக்கோட்டை இளைஞரை விமானநிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:01 pm

DIN

மலேசியாவில் இருந்து கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு திருச்சி வந்த புதுக்கோட்டை இளைஞரை விமானநிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை ஏா் இந்தியா விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரியைச் சோ்ந்த ஆ. பிரசாந்த் (27) தனது கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.