/

கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

 திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளில் கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:01 pm

DIN

 திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளில் கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷனி கூறியது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கரோனா முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.