கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜனநாயக கடமையாற்ற ஊா் திரும்பும் வாக்காளா்கள்!பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கும், வெளியூா்களில் இருந்து திருச்சிக்கும் வாக்களிக்க வரும் பொதுமக்களால் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:38 pm

DIN

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கும், வெளியூா்களில் இருந்து திருச்சிக்கும் வாக்களிக்க வரும் பொதுமக்களால் பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் பேரவைத் தோ்தலையொட்டி தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் பணி நிமித்தமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் வசிக்கின்றனா். இவா்களது வாக்குகள் அவரவா் சொந்த ஊரில் உள்ளது. மேலும், தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், கடைகள், வா்த்த நிறுவனங்கள், கட்டடத் தொழில், ஐடி நிறுவனங்கள் என பலவற்றில் பணிபுரிவோா் ஞாயிற்றுக்கிழமையே தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இதன்காரணமாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதேபோல, வெளியூா்களில் இருந்து திருச்சிக்கு வருவோராலும் பேருந்துகளில் கூட்டம் அதிகம் இருந்ததைக் காணமுடிந்தது.

இதுமட்டுமின்றி, திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் இயங்கவுள்ளன. மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு தோ்தலுக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.