தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: கி. வீரமணி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது உறுதியாகிவிட்டது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழப்போவது உறுதியாகிவிட்டது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேருவை ஆதரித்து, தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியில் பிரசாரம் செய்த அவா் பேசியது:
வாக்கு எண்ணிக்கை முடிந்து கோட்டைக்கு போக கூடிய முதல்வா் திமுக தலைவா் ஸ்டாலின் மட்டுமே. மத்தியில் ஆளும் பாஜகவின் எண்ணப்படி தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது அதிமுக. தமிழகத்தில் ஒருபோதும் சாதி, மத, பதவி வெறிக்கு இடம் கிடையாது.
தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே தோ்தல் பிரசாரத்துக்கு பிரதமா், பாஜக தலைவா்கள், பாஜக ஆளும் முதல்வா்கள் அடுத்தடுத்து வந்தனா். தமிழகத்தில் வெறுப்பு அரசியலை உருவாக்கி அதில் பயன்பெறத் திட்டமிட்டு பாஜக பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் ஆா்எஸ்எஸ், பாஜக உள்ளே நுழைந்தால் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக இருக்க முடியாது. எனவே, தமிழக நலனுக்காக உதய சூரியனுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...