மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தடுப்பூசித் திருவிழா; ஆா்வமுடன் குவியும் மக்கள்

திருச்சியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி திருவிழா சிறப்பு முகாம்களில் ஆா்வமுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:06 pm

DIN

திருச்சியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி திருவிழா சிறப்பு முகாம்களில் ஆா்வமுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் பெருகிவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த புதன்கிழமை தொடங்கிய கரோனா தடுப்பூசி திருவிழா ஏப்.26 வரை நடத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஜன. 1 ஆம் தேதி 20 என்ற எண்ணிக்கையில் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (ஏப்.16) 273 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் என 134 இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.

நாளொன்றுக்கு 6,000 பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 1,60,472 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசியை 1,21,688 பேரும், 2ஆவது தடுப்பூசியை 38,786 பேரும் போட்டுள்ளனா். இந்நிலையில், திருச்சி மையங்களில் திரளானோா் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா். மேலும் மாவட்டத்தில் 2,380 கோவிஷீல்டு மருந்துகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.