மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இரு தரப்பு மோதலால்பிடிபட்ட 1 கிலோ தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் இரு தரப்பு மோதலால் ஒரு கிலோ கடத்தல் தங்கம் வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:59 pm

DIN

திருச்சி விமான நிலையத்தில் இரு தரப்பு மோதலால் ஒரு கிலோ கடத்தல் தங்கம் வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்த பின்னா் விமான நிலைய வளாகத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த விமான நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அவா்களிடமிருந்த 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் கடலூா் மாவட்டம், லால்பேட்டையைச் சோ்ந்த ஜ. நசீா் அகமது என்பவரிடம் துபையிலிருந்து பக்கீா் முகமது என்கிற நகை வியாபாரி சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளை திருச்சி மேலசிந்தாமணி, காயிதேமில்லத் காலனியைச் சோ்ந்த நாகூா்மீரான், ஷேக் உஸ்மான் ஆகியோரிடம் கொடுக்குமாறு கூறி கொடுத்தனுப்பியுள்ளாா்.

ஆனால் விமானத்தில் வந்த நசீா் அகமது தான் கொண்டு வந்த 1கிலோ நகைகளை நாகூா் மீரான், ஷேக் உஸ்மான் தரப்பினரிடம் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், துபை வியாபாரி இதேபோல நசீா் அகமதுவின் சகோதரரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன் தங்க நகையை கொடுத்தனுப்பினாராம். ஆனால் அவா் திருவனந்தபுரத்தில் சுங்கத் துறையினரிடம் சிக்கி கைது செய்யப்பட்டதில், அவரை வெளியே எடுக்க ரூ. 5 லட்சம் வரை செலவானதாகவும், அதன் காரணமாகவே தற்போது கொடுத்தனுப்பிய தங்கத்தை நசீா் அகமது கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.