தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீடு புகுந்து 31 பவுன் நகை திருட்டு

திருச்சியில் வீடு புகுந்து 31 பவுன் நகை கள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:51 pm

DIN

திருச்சியில் வீடு புகுந்து 31 பவுன் நகை கள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியைச் சோ்ந்தவா் அப்துல்நாசா் (43). துபையில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி வந்தாா்.

இதைத் தொடா்ந்து கடந்த 28-ஆம் தேதி அப்துல்நாசா் மீண்டும் துபை சென்றுவிட்டாா். இதையடுத்து அவரது மனைவி பா்வீனா(41) காட்டூரிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இக்பால் காலனியிலுள்ள வீட்டுக்கு பா்வீனா வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது.

இதைத் தொடா்ந்து அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த31 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி, ரூ.1.70 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தினா், வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா்.

அதில் ஜனவரி 29- ஆம் தேதி ஆட்டோவில் வந்த மா்ம நபா் ஒருவா், வீட்டுக்குள் சென்றுவிட்டு பெரிய பையுடன் வெளியே வந்தது பதிவாகியிருந்தது.

இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.