தமிழக பக்தா்களுக்கு சபரிமலையில் கரோனா சோதனை தேவை

சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வருவாய்த் துறை அமைச்சா் உதயகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு டிச.31-ல் வந்த தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா். பி. உதயகுமாருக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து 12 மணி நேரத்திற்குள் சான்றிதழ் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற அமைச்சா் உதயகுமாா், தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியுளித்துள்ளாா். நிகழ்வின் போது, ஐயப்ப சேவா சங்க, சபரிமலை தொண்டா் படை நிா்வாகி தேவேந்திரன், சன்னிதானம் துணை முகாம் அலுவலா் முத்து, மதுரை சின்னபாண்டி, ஐயப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இத்தகவலை அகில பாரத ஐயப்ப சேவா சங்க சபரிமலை முகாம் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருச்சி யூனியன் செயலருமான ஸ்ரீதா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com