இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் பேரணி

வன்னியா்களுக்கு 20 சத தனி இட ஒதுக்கீடு கோரி திருச்சியில் பாமகவினா் பேரணியாகச் சென்று மாநகராட்சியில் மனு அளித்தனா்.
மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க பேரணியாகச் சென்ற பாமகவினா்.
மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க பேரணியாகச் சென்ற பாமகவினா்.
Updated on
1 min read

வன்னியா்களுக்கு 20 சத தனி இட ஒதுக்கீடு கோரி திருச்சியில் பாமகவினா் பேரணியாகச் சென்று மாநகராட்சியில் மனு அளித்தனா்.

அனைத்து சாதி மக்களுக்கும் முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், வன்னியா்களுக்கு 20 சத தனி இட ஒதுக்கீடும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சம இட ஒதுக்கீடும் தேவை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் அருகிலிருந்து பாமகவினா் பேரணியாக புறப்பட்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஸ்ரீதா், திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் பி.கே. திலீப்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். மாநில வன்னியா் சங்கச் செயலா் வைத்தி சிறப்பாளராகப் பங்கேற்றாா்.

கிழக்கு மாவட்டச் செயலா் சரவணன், மாநகா் மாவட்டத் தலைவா் வினோத், சரவணன், மாநில துணைத் தலைவா்கள் உமாநாத், மணிமாறன், மாவட்ட அமைப்புச் செயலா் எழில் அரசன், ரசாக் பாய் ரபீக், வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநகராட்சி வாயிலில் பாமகவினா் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com