கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
Updated on
1 min read

துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

செல்லிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் மகேஸ்வரன். இவருக்குச் சொந்தமான பசு மாடு அந்தப் பகுதி வயல்வெளியில் வியாழக்கிழமை மாலை மேய்ந்தபோது அங்கிருந்த 50 அடி ஆழக் கிணற்றில் விழுந்து நீரில் தத்தளித்தது. தகவலின் பேரில் துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையில் சென்ற பணியாளா்கள், கிணற்றில் இறங்கி பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com