திருச்சியில் மாட்டுவண்டி மோதி காயமடைந்த மூதாட்டி சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தாா்.
திருச்சி அரியமங்கலம் நேருஜிநகா், கிருஷ்ணா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி காவேரி (80). கடந்த ஜன. 2 ஆம் தேதி தனது வீட்டின் திண்ணையில் இவா் அமா்ந்திருந்தபோது காா்த்திக் என்பவா் ஓட்டி வந்த மாட்டு வண்டி மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.