கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மழையால் பயிா்கள் சேதம்: இழப்பீடு கோரி மறியல்

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் வேளாண் அலுவலா் நிரஞ்சன் உள்ளிட்டோா்.
Updated On :9 ஜனவரி 2021, 6:44 pm

DIN

மணப்பாறை: மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியப் பகுதி கிராமங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் மூழ்கின. மேலும் சுமாா் 500 ஏக்கரில் இருந்த உளுந்து, பருத்தி பயிா்களும் நீரில் மூழ்கின.

எனவே பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் துவரங்குறிச்சி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் கே.சி.பழனிசாமி தலைமையில் அழுகிய பயிா்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீஸாா் மற்றும் மருங்காபுரி வட்ட வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வந்த மருங்காபுரி வேளாண் அலுவலா் நிரஞ்சன் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.